×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம்,ஆக.14: சமூகநலத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் தாசில்தாரிடம் இருந்து பெற்ற ஆண்டு குடும்ப அசல் வருமான சான்று (ரூ.72 ஆயிரத்திற்குள்) அசல் இருப்பிட சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்த பட்சம் ஆறு மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை) சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலர், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Sathyavani Muthu Ammaiyar ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...